வெற்றுத்திண்ணை  

பதித்தவர் : எழில்பாரதி in

எப்போது ஊருக்கு வந்தாலும்
வரவேற்பாய்
திண்ணையில் புன்னகைத்தபடி

இப்போது
ஊரை நினைக்கும் போதே
பெருகிடும் கண்ணீர்த்துளிக‌ளை
வ‌ர‌வேற்க காத்துக்கிடக்குது
வெற்றுத்திண்ணை

This entry was posted on Wednesday, July 11, 2007 and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

8 மழைத்துளிகள்

்ம்ம்ம்ம்ம்ம்... உங்களுக்காவது தாத்தா நினைவா அந்தத் திண்ணை இருக்கு... எங்க ஊர்ல திண்ணையும் கூட இப்போ இல்ல...

இந்த கவிதை உணர்வுப்பூர்வமா இருக்கு. தொடர்ந்து இது மாதிரி எழுதுங்கள்.....

அன்புச் சகோதரி எழில் பாரதிக்கு,
தங்கள் கவிதையை படித்தவுடன் என் கண்களில் கண்ணாடி மழைப் போன்று கண்ணீர் பெருக்கெடுத்தோடியது. நான் வெளிநாட்டில் இருப்பதால் என் தத்தா இறப்பிற்குக் கூட விடுமுறை கிடைக்காததால் என்னால் போக முடியவில்லை !! இன்னும் என் தத்தா சொன்ன சிறுகதைகள் என் நினைவில் நிற்கிறது. என்ன செய்ய பாழாய் போகும் பணத்திற்காக உற்றார் உறவினர்களை இழக்க வேண்டிய நிற்பந்தம் !!

உணர்வுகளை நன்றாக உணர்த்துகிறது !! மேலும் கவியுங்கள் எழில் ! :))

ஆம் அருள் இப்பொழுது பல வீடுகளில் திண்ணையை பார்க்க‌ முடிவ‌தில்லை.....
எங்க‌ள் திண்ணையையும் கால‌மாற்ற‌த்தில் இழ‌ந்து விடுவோம்ன்னு ஒரு ப‌ய‌ம் இருக்கிற‌து.....

வ‌ருகைக்கு நன்றி அருள்.....

நன்றி செந்தில்!!!!!!

Post a Comment