சிதறிய
எம் மக்களை
இணைப்பதற்காக
சிதறுகிறேன்
நான்
வலிகளேயின்றி!!!
மழையில்
நனைந்தால்
ஆகாதென்று
முந்தானை
குடைப்பிடிக்கிறாள் அம்மா
மகளின்
கல்லறைக்கு!!!
( ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவந்திருக்கும்
தை கவிதையிதழில் இக்கவிதைகள் இடம்பெற்றுள்ளது!!! )
நன்றி : தை கவிதை இதழ் - 2009