Showing posts with label காதல் கவிதை. Show all posts

காதல் பட்டாம்பூச்சி  

பதித்தவர் : எழில்பாரதி in


சலனமற்று
இருந்த
என்னுள்
அடைமழையின்
முதல்
துளியாய்
நீ!!


மண்வாசனையை
எழுப்பி
விளையாடும்
சிறு மழையாய்
தூக்கங்களை
எழுப்பிவிட்டு செல்கிறாய்
உன்
சில நிமிட
கனவுகளில்!


சில நிமிட
மௌனங்களில்
நம்மைச்சுற்றி
ஓராயிரம்
கவிதை
பட்டாம்பபூச்ச்சிகள்!

           
குளிர்கால
இரவுகளில்
கதகதப்பாய்
போர்த்தி விட்டு
 செல்கின்றன
உன்
நினைவுககள்!!!


எப்பொழுதும்
மழையில் நனைந்து
விளையாடும்
நான்
இப்பொழுதெல்லாம்
ஓளிந்துக்கொள்கிறேன்
உன் முத்த ஈரங்கள்
அழிந்து விடுமோ
என்று!!!

நீ...நான்...காதல்!!!  

பதித்தவர் : எழில்பாரதி in



உன்னிடம்
கோபப்பட்டு
விலகும்போதுதான்
இன்னும்
நெருக்கமாய்
அணைத்துக்கொள்கிறது
காதல்
என்னை!!
காதலித்தது என்னவோ
நாம்
சத்தமே இல்லாமல்
திருமணம்
முடித்துக் கொண்டன‌
நம் விரல்கள்
மாலையாய்
மோதிரங்களை மாற்றி!!!

சீண்டல்களும்
சமாதானங்களும்
நேரங்களை களவாடிக்கொண்டு
சொற்ப நேர‌ங்க‌ளே
கிடைப்ப‌தால்
கோப‌மாம்
முத்தத்திற்கு
ந‌ம் காத‌லோடு!!!
என்னை
சீண்டி சீண்டி
விளையாடும்
உன்னை
சீண்டிப் பார்க்கலாமே
என்று கோவ‌மாய்
ந‌டித்தால்
எல்லாமும் அறிந்த‌வ‌னாய்
தொட‌ங்குகிறாய்
உன்
அடுத்த‌ சீண்ட‌லை....

தண்டவாளங்களாய்
இருக்கும்
இதயங்களில்
இனிதே தொடங்கியது
பயணத்தை
நம் காதல்!!!

உன் மெளன‌
நிழற்குடையில்
காத்திருக்கும்
என் காதலுக்கு
ஒரு
புன்னகையை மட்டும்
சிந்தி போ
நிம்மதியாய் இளைப்பாறும்!!!
பயணங்களில் கலையும்
என் கூந்தலை
சரி செய்கிறேன்
என்று
என் வெட்கங்களை
கலைத்து
விட்டு செல்கிறாய்!!!
தன்னை
மறந்து
தூங்கும் குழந்தையின்
சுகம் கண்டு
ஏங்குது
காதல்
உன் மடி
வந்து துயில!!!

இதுவரை
வெற்றிடமாய்
இருந்த‌
என்
இதயக்கூட்டில்
அனுமதியே
இல்லாமல்
விரித்துவிட்டாய்
உன்
காதல் சிறகை!!!

உன் வருகைக்காக
காத்திருப்பது
நான் மட்டும்
அல்ல
எனக்கு துணையாய்
நீ கொடுத்து விட்ட
சென்ற
கடைசி முத்தமும் தான்!!!

என்னுள் நீ!!!  

பதித்தவர் : எழில்பாரதி in

மழைக்காலங்களில்
மரங்களில் ஒளிந்திருக்கும்
மழைத்துளிகளை
அம்பலப்படுத்தும்
காற்றைப்போல்
என்னுள்
ஒளிந்திருக்கும்
காதலை
அம்பலப் படித்திவிடுகிறது
என்னை கடந்துசெல்லும்
உன் சுவாசம்!!!!

உன்னை
சந்திக்கும் வரை
உன்னை யார்யென்றே
தெரியாது

உன்னை
சந்தித்த பின்பு
உன்னைத் தவிர
எனக்கு
யாரையும்
தெரியவில்லை!!!!!!



இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்
காதலாய்!!!

ஊடல் கணங்களில்
என்ன பேசுவதென்று
தெரியாமல்
வார்த்தைகள் தத்தளிக்கும் போது
சலனமே இல்லாமல்
பேசத்தொடங்கி விடுகின்றன
நம் விரல்கள்!!!

என்னை
தூங்கச் சொல்லிவிட்டு
நம் கைப்பேசி
உரையாடலை
முடித்துவைத்தாய்
உன்முத்த சத்தங்களோ
என் தூக்கத்தோடுதான்
விளையாடுவேன்
என்று
அடம் பிடிக்கிறது!!!!

சில்மிஷக் காதல்!!!  

பதித்தவர் : எழில்பாரதி in

எங்குதான்
கற்றுக்கொண்டதோ
என் விழிகள்
உன்
குறும் பார்வையின்
வார்த்தைகளை
மொழிப் பெயர்ப்பதற்கு

அலை
நனைத்து விட்டு
போகும்
மணற்போல்
என்றும்
உலராமலே
இருக்கும்
எனக்குள்
உன் காதல்

தூங்கவே விடாமல்
கண்ணாமூச்சி
விளையாடுகிறது
உன் காதல்
என் இரவுகளோடு

உன்
சில்மிஷ விரல்களை
சிறைப்பிடித்த
என்னை
உன்
காதல் சுவாசத்தால்
சிறைப்பிடித்து விட
திணறுகிறது
நம் காதல்
முதல்
தண்டனை
யாருக்கு கொடுப்பதென்று

எத்தனை
கோபங்கள் இருந்தாலும்
அலை துரத்தி
விளையாடும்
சிறு நண்டை
போல்
உன்னையே துரத்தி
வருகிறது
என் இதயம்

உனக்கும்
எனக்குமான
இடைவெளியை
அளக்கும்
அளவுகோலாய்
நம்
காதல் சுவாசம்!

கண் சிமிட்டும் காதல்!!! - 2  

பதித்தவர் : எழில்பாரதி in

நீ
அணிவித்த கொலுசுகளுக்கு
சொல்லிவை
நான் மட்டுமே
உச்சரிக்கும்
உன் பெயரை
ஊருக்கே உரக்க கேட்கும் படி
உச்சரிக்க வேண்டாம்
என!!!

திருமணத்திற்கு
முன்னும் பின்னும்
இருக்கும் காதலுக்கு
என்ன வித்தியாசம்
என்றதும்
நானாக பெறும் முத்தத்திற்கும்
நீயாக தரும் முத்தத்திற்கும்
உள்ள வித்தியாசம் தான்
என்று
கண் சிமிட்டி சிரிக்கிறாய்!!!
உன் வருகை
இல்லாத நாட்களில்
அழுது ஆர்பாட்டம் செய்யும்
நம் காதல் குழந்தையை
எப்படிதான் சமாளிப்பதோ!!!!


உன்
பார்வைகள் தான்
கற்றுக் கொடுத்தன
என்
இமைகளுக்கும்
வெட்கப்படத்
தெரியும்
என்று!!!

நீ
முத்தம் கேட்டு
கொடுக்கவில்லை
என்றால்
திட்டி தீர்த்து விடுகின்றன
என் இதழ்கள்!!!

சாகாவரம்
பெற்று
வளர்ந்துக் கொண்டே
இருக்கிறது
நம்
முதல் முத்தம்!!!

முத்தத்தில்
கூட
சோர்ந்து போகாத
நம்
இதழ்களை
சோர்வடைய செய்கிறது
ஊடல்
உடைந்து
எழத்
துடிக்கும்
முதல் வார்த்தை!!!

உன் அருகாமையை
அனுபவிப்பதா
இல்லை
உன் சில்மிஷங்களை
ரசிப்பதா
எனத்
தெரியாமல்
திணறச்செய்கிறது
உன் காதல்

கண் சிமிட்டும் காதல்!!!  

பதித்தவர் : எழில்பாரதி in

திருமணத்திற்கு
முன்னும் பின்னும்
இருக்கும் காதலுக்கு
என்ன வித்தியாசம்
என்றதும்
நானாக பெறும் முத்தத்திற்கும்
நீயாக தரும் முத்தத்திற்கும்
உள்ள வித்தியாசம் தான்
என்று
கண் சிமிட்டி சிரிக்கிறாய்!!!

உன் வருகை
இல்லாத நாட்களில்
அழுது ஆர்பாட்டம் செய்யும்
நம் காதல் குழந்தையை
எப்படிதான் சமாளிப்பதோ!!!

நீ
முத்தம் கேட்டு
கொடுக்கவில்லை
என்றதும்
திட்டி தீர்த்து விடுகின்றன
என் இதழ்கள்!!!

முத்தத்தில்
கூட
சோர்ந்து போகாத
நம்
இதழ்களை
சோர்வடைய செய்கிறது
ஊடல்
உடைந்து
எழுத்
துடிக்கும்
முதல் வார்த்தை!!!

உன் அருகாமையை
அனுபவிப்பதா
இல்லை
உன் சில்மிஷங்களை
ரசிப்பதா
எனத்
தெரியாமல்
திணறச்செய்கிறது
உன் காதல்!!!

காதலாய் .... !!!!!  

பதித்தவர் : எழில்பாரதி in


நம் காதல்
பிறந்த நாளை
கொண்டாட‌
உனக்காக‌
பரிசுப்பொருளை
தேடித் தேடி
வாங்கி வர‌
நீயோ
தேடல்களே
இல்லாமல்
எடுத்து
வருகிறாய்
உன் இதழ்களில்!

தின‌மும்
க‌ன‌வில்
பார்த்துக் கொள்வோம்
என்ற‌
ந‌ம்பிகையில் தான்
முடிவ‌டைகிற‌து
ந‌ம்
ச‌ந்திப்புக‌ள்!!


நாம்
ச‌ந்தித்த‌
இட‌ங்க‌ள்
எல்லாம்
பூஞ்சோலையாய்
பூத்துக் குலுங்குகின்றன
நம்
முத்த சார‌ல்க‌ளில்...



முரட்டுத் தனமான‌
அணைப்புகளையும்
மென்மையான‌
முத்தங்களையும்
ஒரு சேர‌
வைத்திருக்கும்
என்
காதல் ஹிட்லர்
நீ!!!


முத்த‌ங்களின்
ஒத்திகை
அழகாய்
நடந்தேறியது
நம்
தலையணை
சண்டையில்!!

காதல் மழை  

பதித்தவர் : எழில்பாரதி in

உன்
முத்தங்களின்
ஈரங்களும்
அழகாய்
வரைகிறது
நம் காதலை

எனக்காக‌
கவிதை
எழுதிக்கொடு
என்று கேட்டதும்
அழகிய
கவிதைகளை
எழுதி விட்டு
சென்றன‌
உன் உதடுகள்

கடற்கரையில்
நம்மை
பார்த்ததும்
ஆசையாய்
பாதங்களை
ந‌னைக்க வந்த‌
அலைகளையும்
வெட்கம் கொள்ள செய்தன
நம் இதழ்கள்!


தொடக்கமும்
முடிவும்
அறியா
நெடுந்தூரப் பயணம்
காதல்


தூக்கத்தில்
நான் எப்போதும்
சிரித்துக் கொண்டிருப்பதாக‌
தோழிகள்
கேலி செய்கிறார்கள்
அவர்களுக்கு
எங்கேத் தெரியும்
நான் உன்னோடுதான்
சிரித்துக் கொண்டிருக்கிறேன்
என்பது

எத்தனை
முறை
சுவைத்தாலும்
திகட்டாத‌
தித்திப்பு
உன்
முத்தங்கள்


கோடையில்
எல்லோரும்
வாடிக் கொண்டிருக்க‌
நான்
ம‌ட்டும்
குளிர்ந்துக் கொண்டிருந்தேன்
உன்
முத்த மழையில்

தனித் தனித்
செடிகளாய்
வளர்நத‌
நம்மில்
ஒற்றை
மலராய்
காதல்


நம்
விழிகள்
எழுதிய‌
முதல்
கவிதை
காதல்


உன்
கெஞ்சல்களில்
தோற்று விடுகின்ற‌‌ன‌
என்
கொஞ்சல்கள்