நீ...நான்...காதல்!!!  

பதித்தவர் : எழில்பாரதி in



உன்னிடம்
கோபப்பட்டு
விலகும்போதுதான்
இன்னும்
நெருக்கமாய்
அணைத்துக்கொள்கிறது
காதல்
என்னை!!
காதலித்தது என்னவோ
நாம்
சத்தமே இல்லாமல்
திருமணம்
முடித்துக் கொண்டன‌
நம் விரல்கள்
மாலையாய்
மோதிரங்களை மாற்றி!!!

சீண்டல்களும்
சமாதானங்களும்
நேரங்களை களவாடிக்கொண்டு
சொற்ப நேர‌ங்க‌ளே
கிடைப்ப‌தால்
கோப‌மாம்
முத்தத்திற்கு
ந‌ம் காத‌லோடு!!!
என்னை
சீண்டி சீண்டி
விளையாடும்
உன்னை
சீண்டிப் பார்க்கலாமே
என்று கோவ‌மாய்
ந‌டித்தால்
எல்லாமும் அறிந்த‌வ‌னாய்
தொட‌ங்குகிறாய்
உன்
அடுத்த‌ சீண்ட‌லை....

தண்டவாளங்களாய்
இருக்கும்
இதயங்களில்
இனிதே தொடங்கியது
பயணத்தை
நம் காதல்!!!

உன் மெளன‌
நிழற்குடையில்
காத்திருக்கும்
என் காதலுக்கு
ஒரு
புன்னகையை மட்டும்
சிந்தி போ
நிம்மதியாய் இளைப்பாறும்!!!
பயணங்களில் கலையும்
என் கூந்தலை
சரி செய்கிறேன்
என்று
என் வெட்கங்களை
கலைத்து
விட்டு செல்கிறாய்!!!
தன்னை
மறந்து
தூங்கும் குழந்தையின்
சுகம் கண்டு
ஏங்குது
காதல்
உன் மடி
வந்து துயில!!!

இதுவரை
வெற்றிடமாய்
இருந்த‌
என்
இதயக்கூட்டில்
அனுமதியே
இல்லாமல்
விரித்துவிட்டாய்
உன்
காதல் சிறகை!!!

உன் வருகைக்காக
காத்திருப்பது
நான் மட்டும்
அல்ல
எனக்கு துணையாய்
நீ கொடுத்து விட்ட
சென்ற
கடைசி முத்தமும் தான்!!!

விடியல்!!!  

பதித்தவர் : எழில்பாரதி in ,



வெள்ளை மாளிகையில்
கறுப்புச்சூரியன்
விடியுமா
நாளை
எமக்கான விடுதலை!!!

ஈழக்கவிதைகள்!!!  

பதித்தவர் : எழில்பாரதி in ,

சிதறிய
எம் மக்களை
இணைப்பதற்காக
சிதறுகிறேன்
நான்
வலிகளேயின்றி!!!



மழையில்
நனைந்தால்
ஆகாதென்று
முந்தானை
குடைப்பிடிக்கிறாள் அம்மா
ம‌க‌ளின்
கல்லறைக்கு!!!


( ஈழத்தமிழரின் வலிகளை சும‌ந்து வெளிவந்திருக்கும் தை கவிதையிதழில் இக்கவிதைகள் இடம்பெற்றுள்ளது!!! )

நன்றி : தை கவிதை இதழ் - 2009