என்ன ஒரு அருமையான உறவு!!!!
உலகத்தில் அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு உயிர் என்றால் அது அம்மாதான்!!!
இன்று என் அம்மாவின் பிறந்த நாள்!!!
அம்மாவாய் மட்டும் அல்ல இன்று வரை எனக்கு நல்ல தோழியாகவும் என்னை வழிநடத்துபவர்!!!
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயது என்று குறிப்பாக சொல்லமுடியாது நினைவுத்தெரிந்து என் 6 வயதில் உறவினர்களோடு.... நாயகன் படம் பார்த்தேன் நாகேஷ் திரையரங்கில் பாண்டிபஜாரில் அது ஒரு நல்ல திரையரங்கு இப்போது அது கல்யாணமண்டபமாய் உருமாறியுள்ளது) ..... இப்போ கதைக்கு வருவோம் ரெண்டு பேர் சத்தமா பேசினாலே அழுதுடுவேன் அதுல அடி தடி இரத்தம் வேறயா கேட்கவே வேண்டாம்.... நான் அழுது ஆர்ப்பாட்டம் செய்ததுல பாதி படத்திலையே வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க...இப்போவும் அந்த படம் பார்க்கும் பொழுது இதுக்கா அவ்வளவு ஆர்ப்பாட்டம்ன்னு மனசுக்குள்ளயே சிரிச்சிக்குவேன்....
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
கடைசியாய் என் தோழிகளோடு சத்தியம் திரையரங்கில் பாட்டுக்காக படத்துக்கு போக ஆசைப்பட்டு நொந்துட்டேன்...
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
அரங்கிலன்றி சமிபத்தில் குறுந்தகடில் பார்த்தத் திரைப்படம் ராமன் தேடிய சீதை.... மிகவும் நல்ல திரைப்படம் 5 நாயகிகள் படத்தில் இருந்தாலும் முகம் சுளிக்க வைக்காமல் இயல்பான கதையை அழகாய் எடுத்திருக்கிறார் இயக்குனர் அதுவும் பசுபதி சம்மந்தப் பட்ட காட்சிகள் மிகவும் அற்புதமானவை... கேட்க கேட்க தெவிட்டாத 3 அற்புதமான பாடல்கள்.... நல்ல படம்!!!
4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
நிறைய இருக்கிறது உதிரிப்பூக்கள், மெளனராகம்,மெல்லத் திறந்தது கதவு,முதல் மரியாதை,மூன்றாம்பிறை,பவித்ரா,அன்புள்ள அப்பா, பூவே பூச்சூடவா,காக்க காக்க, காற்றுக் கென்ன வேலி அப்படியே பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்...
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?காதலில் விழுந்தேன் திரைப்படம் சன் குழுமத்திற்கும் கலைஞர் குழுமத்திற்கும் நடுவில் சிக்கித்தவித்த சம்பவம்
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?இந்தியன், தசவதராம் படங்களில் கமல் மேக்கப்!!
6. தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?நிறைய....
7.தமிழ் சினிமா இசை?
இளையராஜா 80களில் இசை அமைத்த ஒவ்வொரு பாடலும் நம்மை கடத்தி செல்லும்... இப்பொழுது வரும் மெலடி பாடல்கள் எல்லாமே பிடிக்கும்...
தமிழ் சினிமா இசை இப்பொழுது ஆங்கில ஆல்பங்களை நம்பி இருக்கிறதோ என்கிற ஆதங்கத்தையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
நிறைய பார்ப்பதுண்டு அதிலும் ஈரானிய மொழிப் படங்களை விரும்பி பார்ப்பதுண்டு
childrens of heaven, color of paradise,mamas Guest போன்ற படங்கள் அதிகம் தாக்கிய படங்கள்
ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் தொலைக்காட்சியில் உலக திரைப்படங்கள் பார்பதுண்டு தம்பி கையில் இருந்து வெற்றி கரமாக "remote"-யை பறித்துவிட்டால் அதை பார்க்கலாம் இல்லைனா விஜய் தொலைக்காட்சி மொழிபெயர்ப்பு படங்கள் தான்...
மற்றபடி ஹிந்தி,தெலுங்கு,மலையாள மொழிகளிலும் நல்ல திரைப்படங்களை பார்பதுண்டு...
9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
தொடர்பு இல்லை... பாவங்க தமிழ் சினிமா இப்பவே கஷ்டப்படுது விட்டுடலாம்
10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பாவமா இருக்கு தமிழ் சினிமாவை பார்த்தால் சன் குழுமத்திற்கும் கலைஞர் குழுமத்திற்கும் சிக்கி தவிக்கபோவதை நினைத்து..
11. ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்
எந்த மாற்றமும் இருக்காது... மக்கள் சீரியலே கதி என்று அழுது கொண்டிருப்பார்கள்
குறிப்பு: நான் கூப்பிடனும்ன்னு நினைத்த எல்லோரையும் ஸ்ரீயே அழைத்து விட்டார் அதனால் யாரையும் அழைக்கவில்லை!!!
மரங்களில் ஒளிந்திருக்கும்
மழைத்துளிகளை
அம்பலப்படுத்தும்
காற்றைப்போல்
என்னுள்
ஒளிந்திருக்கும்
காதலை
அம்பலப் படித்திவிடுகிறது
என்னை கடந்துசெல்லும்
உன் சுவாசம்!!!!
சந்திக்கும் வரை
உன்னை யார்யென்றே
தெரியாது
உன்னை
சந்தித்த பின்பு
உன்னைத் தவிர
எனக்கு
யாரையும்
தெரியவில்லை!!!!!!
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்
காதலாய்!!!
ஊடல் கணங்களில்
என்ன பேசுவதென்று
தெரியாமல்
வார்த்தைகள் தத்தளிக்கும் போது
சலனமே இல்லாமல்
பேசத்தொடங்கி விடுகின்றன
நம் விரல்கள்!!!
என்னை
தூங்கச் சொல்லிவிட்டு
நம் கைப்பேசி
உரையாடலை
முடித்துவைத்தாய்
உன்முத்த சத்தங்களோ
என் தூக்கத்தோடுதான்
விளையாடுவேன்
என்று
அடம் பிடிக்கிறது!!!!
அணிவித்த கொலுசுகளுக்கு
சொல்லிவை
நான் மட்டுமே
உச்சரிக்கும்
உன் பெயரை
ஊருக்கே உரக்க கேட்கும் படி
உச்சரிக்க வேண்டாம்
என!!!
முன்னும் பின்னும்
இருக்கும் காதலுக்கு
என்ன வித்தியாசம்
என்றதும்
நானாக பெறும் முத்தத்திற்கும்
நீயாக தரும் முத்தத்திற்கும்
உள்ள வித்தியாசம் தான்
என்று
கண் சிமிட்டி சிரிக்கிறாய்!!!
உன்
பார்வைகள் தான்
கற்றுக் கொடுத்தன
என்
இமைகளுக்கும்
வெட்கப்படத்
தெரியும்
என்று!!!
நீ
முத்தம் கேட்டு
கொடுக்கவில்லை
என்றால்
திட்டி தீர்த்து விடுகின்றன
என் இதழ்கள்!!!
சாகாவரம்
பெற்று
வளர்ந்துக் கொண்டே
இருக்கிறது
நம்
முதல் முத்தம்!!!
கூட
சோர்ந்து போகாத
நம்
இதழ்களை
சோர்வடைய செய்கிறது
ஊடல்
உடைந்து
எழத்
துடிக்கும்
முதல் வார்த்தை!!! உன் அருகாமையை
அனுபவிப்பதா
இல்லை
உன் சில்மிஷங்களை
ரசிப்பதா
எனத்
தெரியாமல்
திணறச்செய்கிறது
உன் காதல்
முன்னும் பின்னும்
இருக்கும் காதலுக்கு
என்ன வித்தியாசம்
என்றதும்
நானாக பெறும் முத்தத்திற்கும்
நீயாக தரும் முத்தத்திற்கும்
உள்ள வித்தியாசம் தான்
என்று
கண் சிமிட்டி சிரிக்கிறாய்!!!
உன் வருகை
இல்லாத நாட்களில்
அழுது ஆர்பாட்டம் செய்யும்
நம் காதல் குழந்தையை
எப்படிதான் சமாளிப்பதோ!!!
நீ
முத்தம் கேட்டு
கொடுக்கவில்லை
என்றதும்
திட்டி தீர்த்து விடுகின்றன
என் இதழ்கள்!!!
முத்தத்தில்
கூட
சோர்ந்து போகாத
நம்
இதழ்களை
சோர்வடைய செய்கிறது
ஊடல்
உடைந்து
எழுத்
துடிக்கும்
முதல் வார்த்தை!!!
உன் அருகாமையை
அனுபவிப்பதா
இல்லை
உன் சில்மிஷங்களை
ரசிப்பதா
எனத்
தெரியாமல்
திணறச்செய்கிறது
உன் காதல்!!!
மூன்று பெரிய ஜாம்பவான்கள் நினைவுக்கு வந்தாங்க.அடடா.. கையில் வெண்ணையை வைச்சுக்கிட்டு நெய்'க்கு அலைவானேன்னு,அடிச்சு, புடிச்சு அப்பாயின்மெண்ட் வாங்கிட்டேன்ல்ல. அவங்களும், எம்மேல பரிதாபப்பட்டு, அவங்க பிஸி ஷடியுல்ல கொஞ்சோண்டு , நேரத்தை ஒதுக்கி எனக்கு ரொம்ப உதவி செய்தார்கள்....இதுல ஒருத்தர் சொல்லிக்கொடுத்ததற்க்கு குருதட்சணை வேற கேட்டார்.
அவர்கள் யார்? & அவங்க கேட்ட குருதட்சணை என்ன?ன்னு இறுதியில் தெரிஞ்சுக்கலாமா?. இப்பொழுது நம்ம V.V.I.Pகள் சொல்லிக் கொடுத்த பாடல்களை பார்ப்போம்...
முதல் பாடலை ஸ்பான்ஸர் பண்ணவர் ரொம்ப ஸ்பீடு.அவர் பாட்டு சொல்லும் போது எனக்கு சரியா புரியவே இல்ல.சீடியை வேகமா ஃபார்வேட் பண்ண மாதிரி ,மின்னல் வேகமா,ராகத்தோட பாடிக் காட்டினார்.. "சார், கொஞ்சம் பொறுமையா சொன்னிங்கனா நோட்டுஸ் எடுக்க உதவியா இருக்கும்ன்னு கெஞ்சி கேட்டா (கல்லூரிலக் கூட நோட்ஸ் எடுக்க இவளோ கஷ்டப்படல)... அவர் இரண்டு வரி பொறுமையா சொல்லிவிட்டு
அடுத்தடுத்த வரிகளை ஜெட் வேகத்திற்கு கூறினார்.மறுபடியும், கொஞ்சம் பொறுமையா சொல்லுங்களேன்"என்று கேட்டது தான்.வந்துச்சு பாருங்க அவருக்கு கோவம்,பாதி(பாரதி என்பதை அவர் அப்படிதான் கூப்பிடுவார்) உனக்கு உங்க மிஸ் சொல்லிக் கொடுத்தாங்கல?அப்புறம் ஏன் இப்படி என்னை போன் போட்டு தொந்தரவு பண்ணுறே?ன்னு சொல்லி போனை கட் பண்ணிடார்
அச்சச்சோ நாம தான் அவசரப்பட்டுடோமோன்னு தோனுச்சு. சரி..,அவர் சொன்ன வரை உங்களுக்கு தந்திருக்கேன்.
அவர் சொன்னப் பாடல்...
"குள்ள குள்ள வாத்து
குவா குவா வாத்து
மெல்ல உடலை சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்னமணி வாத்து!!!!"
திரும்ப அவரை கேட்டால்,அவர் சிதம்பரத்தில் இருந்து சென்னை வீடு தேடி வந்து வந்து அடிக்கும் அபாயமிருப்பதால், வேறு யாரிடம் கேட்கலாமென்று யோசிக்கையில் ஒரு மேடம் நியாபகத்துக்கு வந்தாங்க அவங்க கிட்ட கேட்டா பாடல் கிடைக்கும் ஆனால் அவங்க சொல்லுவாங்களா இல்லை,இதுக்கெல்லாம் நேரம் இல்லைன்னு சொல்லிடுவாங்கன்னு கொஞ்சம் டவுட்டு இருந்தது... மேடம் இந்த சின்ன புள்ளைக்கு கொஞ்சம் உதவி செய்யுங்க. ஒரு பாட்டு சொல்லுங்கன்னு பணிவா கேட்டதும். சும்மா சொல்லக்கூடாது,எம்புட்டு ஆர்வமா அவங்க நேரத்தை ஒதுக்கி ஒரு பாட்டு சொன்னாங்க. அவங்களுக்கு ஒரு ஸ்பெசல் தாங்க்ஸ். அப்பாடல்....
யானை யானை அழகர் யானை
அழகரும் சொக்கரும் ஏறும் யானை
குட்டி யானைக்கு கொம்பு முளைச்சதாம்
பட்டணம் எல்லாம் பறந்து போச்சாம்..........
இன்னும் பாடல்கள் கிடைக்குமான்னு இல்லாத மூளையை கசக்கி யோசிக்கும் பொழுது ஒருத்தவங்க நினைவுக்கு வந்தாங்க வந்தாங்க. மேடம் பேசும்போதே சண்டை போடுவாங்களே?.நமக்காக பாட்டெல்லாம் பாடுவாங்களான்னு யோசிக்கிட்டே போன் போட்டு மேடம் ஒரு பாட்டு வேணும்ன்னு கேட்டதும்
அதெல்லாம் முடியாதுன்னு ரொம்ப அடம் பிடிச்சாங்க ரொம்ப நேர கெஞ்சல்கள்,கொஞ்சல்களுக்கு பிறகு,போனாப் போவுதுன்னு என்மேல் பரிதாபப்பட்டு, ஒரு பாட்டு சொன்னாங்க...
அவங்க சொன்ன பாடல்
தம்பி தம்பி என்ன வேண்டும்?
பழம் வேண்டும்
என்ன பழம்?
பலாப்பழம்
என்னப் பலா?
வேர்ப் பலா
என்ன வேர்?
வெட்டி வேர்
என்ன வெட்டி?
விறகு வெட்டி
என்ன விறகு?
மா விறகு
என்ன மா?
அம்மா!!!
எப்படியோ பெரிய பெரிய ஆளுங்ககிட்ட கெஞ்சி பாட்டெல்லாம் போட்டாச்சுன்னு இப்போதான் திருப்தி).
இவங்க பாட்டெல்லாம் கேட்டப்பறம் ,நமக்கும் பாடல் பாடணும் போல தோணுது இல்ல.?.எனக்கும் அப்படி தோனுதே..!!! எவ்வளவோ பண்ணிட்டோம், இதைப் பண்ண மாட்டோமா?:P
இதையும் "காதை மூடிக்கிட்டு" கேட்டுருங்க மக்களே.
கஷ்டப்பட்டு ஃபிளாஸ்பேக் கொசுவத்தியெல்லாம் சுத்தி ,சுவத்துலல்லாம் முட்டிக்கிட்டு யோசிச்சதுல ,நான் சின்ன வயசுல பாடின ரெண்டு பாட்டு ஞாபகத்துக்கு வந்துச்சு (அப்பவே நானெல்லாம் பெரிய பாடகியாக்கும்:)
ரெடி.. ஒன்..டூ.. திரி...
"அதோ பாரு காக்கா
கைடையில விக்கிது சீக்கா
பொண்ணு வரா சோக்கா
எழுந்துப் போடா மூக்கா!!!"
எப்டியிருக்கு என்னோட கருத்தாழம் மிக்க பாட்டு.
அட, இதுக்கே ஆனந்தக் கண்ணீர் விட்டா எப்படி?
உங்களுடைய அன்பு வேண்டுக்கோளுக்கிணங்க இன்னொரு பாட்டையும் பாடிடறேன்.கேட்டுக்கோங்க..
இந்தப் பாடல் எங்க ஊருல "ஜேம்ஸ் பாண்டு 007" விளையாடும்போது (அதாங்க கண்ணாமூச்சின்னு சொல்லுவாங்களே ) பாடுகிற பாடல்.
"கண்டுபிடிப்பவர்: மரங்கொத்தி குருவி
ஒளிந்துக்கொள்பவர்கள்: ஏன் ஏன் குரருவி
கண்டுபிடிப்பவர்: பல்ல வலிக்குது
ஒளிந்துக்கொள்பவர்கள்: நெல்லைல் கொருச்சிக்கோ
கண்டுபிடுப்பவர் : மாப்புட்டிக் காணும்
ஒளிந்துக்கொள்பவர்கள்: தேடிப் புடிச்சிக்கோ..."
இதைப்பத்தி சொல்லும்போது எனக்கு இன்னொரு பாட்டு ஞாபகத்துக்கு வருது.பாடவா?,.,
சரி சரி அழுவாதிங்க.. இத்தோட விட்டுறலாம்.
எனக்கு பாடல்களை சொல்லித்தந்த அந்த V.V.I.Pகள் யாருன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கிங்களா?
எனக்கு உதவிய அந்த ஜாம்பவான்கள்.........
என் சகோதரியின் மகன் அகிலன், இவரு L.K.G படிக்கிறாரு... பார்க்கதான் அமைதியா இருப்பாரு கேள்வி கேட்க தொடங்கினா நமக்கு பதில் சொல்ல முடியாது
என் தோழியின் மகள் யாழினி இவங்களுக்கு 2 வயது மேடம் பாட்டுல மட்டும் இல்ல போஸ் கொடுக்கிறதலயும் செம்ம புத்திசாலி
என் மாமா மகள் கனிமொழி இவங்களும் L.K.G படிக்கிறாங்க ........ இவங்க எப்போவும் போன் பேசினா சண்டைதான் போடுவாங்க.....
இவங்க எல்லோரும் கேட்ட குருதட்சணை "ஐஸ்கிரிம்"
இந்த ஆட்டத்துக்கு நான் அழைப்பவர்கள்..
1. மொழியோடு பயணம் செய்யும் அண்ணன் பிரேம்குமார்
2. மத்தாப்பாய் ஜொலிக்கும் திவ்யா மாஸ்டர்
3. புதியதாய் வலையுலகில் அறிமுகமான உளறல் சத்யா....
"அம்மா, நான் கிளம்பறேன்" என்றுமில்லாமல் புதிதாய் முகிலன் சீக்கிரம் கிளம்பியது அம்மாவிற்கு வியப்பாய் இருந்தது
"என்னப்பா!, மணி ஏழு தானே ஆகுது அதுக்குள்ள கிளம்பிட்டியே?"
"இல்லம்மா, கொஞ்சம் வெளி வேலை இருக்கு, அதான்"
"நைட்டும் நீ லேட்டா தான் வந்த..,. வந்தும் சாப்பிட்டு தூங்காம.., கம்யூட்டர்ல உட்கார்ந்துட்ட, இப்படியே இருந்தா உடம்பு என்னத்துக்குறது? காலையில வெறும் வயத்துல கிளம்ப வேணாம். இருப்பா.. ரெண்டு தோசை வார்த்து தாரேன். சாப்பிட்டு போப்பா.."
அம்மாவின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் கட்டுப்பட்டான். இல்லாவிட்டால்.. தன்னை போக விடமாட்டார் என்று தெரியும். இரண்டு தோசைகள் சாப்பிடும் அளவு கூட மனம் பொறுக்கவில்லை.
"சரிம்மா போதும்.. நான் கிளம்பறேன்...." என்று வண்டியை எடுத்துக் கொண்டு பறந்தான்.
போகும் வழியில் வண்டியை நிறுத்தி, அன்றைய ஒரு செய்திதாள் வாங்கி, புரட்டிப்புரட்டி பார்த்தான். அவன் எதிர்பார்த்த செய்தி இல்லை. பக்கங்களை அவசரமாக புரட்டியபோது, ஒரு மூலையில் சின்னதாக ஒரு காலத்தில் அவன் எதிர்பார்த்த செய்தி வந்திருந்தது. எதிர்பார்ப்பு ஏமாற்றமாகும் போது வந்து சேரும் மனம் சோர்ந்து போவது இயல்பு.
முகிலனும் சோர்ந்து போனான். அப்படியே பத்திரிக்கையை சுருட்டி வண்டியின் முன் பக்கம் வைத்துவிட்டு, ஓட்டத்துவங்கினான்.
அலுவலகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு திரும்புகையில், "டேய் மச்சான் என்னடா இது, இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே? அதிசயமா இருக்கியே... பின்னாடி வந்த முகிலனின் அலுவலக நண்பன் ரவி கேட்டது கூட, காதில் விழாதவனாய் அலுவலகத்தை நோக்கி நடந்தவனின் தோளைத் தட்டினான் ரவி.
"டேய் உன்னத்தான்டா.."
"ஓ... .சாரிடா, ஏதோ ஒரு யோசனையில் இருந்துட்டேன்....".
"அத விடு! என்ன சீக்கரம் வந்துட்டே...?"
"கொஞ்சம் வேலை இருந்த்ச்சுடா.. அதான்.."
அவன் வேலை என்று சென்னதை ரவியால் முழுமையாய் ஏற்றுக் கொள்ள முடியவில்லை இருவரும் ஒரே குழுவில் இருப்பதால் அவசரமான வேலைகள் எதுவும் இல்லை என்பதும் ரவிக்கு தெரியும். அப்புறம் ஏன் இப்படி சொல்றான்.
"டேய் முகில் என்னாச்சு உனக்கு... ஏன் ஒருமாதிரியா டென்சனா இருக்க?" ஒரு நிமிடம் ரவியையே பார்த்தான்.
"சொல்லவிருப்பம் இல்லாட்டி விடுடா..?"
"அப்படியெல்லாம் ஒன்னுமில்ல ரவி! இன்னைக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வருதுடா. அதான் டென்சனா இருக்கேன்..."
"டேய் லூசா நீ..., பத்தாம் வகுப்பு எல்லாம் நாம முடிச்சு பத்து வருசம் ஆகியிருக்கும். இப்போ ஏன்டா பயப்படறே?"
"அதுக்கில்லடா உனக்கு நியாபகம் இருக்கா? நாமெல்லாம் ரெண்டு மாசம் முன்னே ஒரு இல்லத்துக்கு போய் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தோமே..."
"ம்ம்.. ஆமா.. அதுக்கென்ன இப்போ?"
"இல்லடா அவங்கெல்லாம் நல்ல படிக்கிற பிள்ளைங்கடா அவங்க பாடங்களை தேர்வுக்காக எப்படியும் படிச்சிருப்பாங்க. நாம அங்கே போய்... அவர்கள் மனநிலையை கலைத்து விட்டோமோ என்று ஒரு பயம் எனக்குள்ள இருந்துச்சுடா... ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு விதத்துல படிச்சா, எளிமையா மனசுல புரியும்.
நாம என்னவோ எளிமையா படிக்க அறிவுறைகள் சொல்லறதா நெனைச்சு, இப்படி தான் படிக்கனும், அது இதுன்னு நம்மோட கருத்துக்களை டிப்ஸ்ங்கற பேருல சொல்லி பசங்களை குழப்பிட்டோமோன்னு ஒரு குற்ற உணர்வு.
ஒரு வேளை பரிட்சைக்கு பல மாதங்கள் முன்னாடி இப்படி ஆலோசனை கூட்டம் நடத்தியிருந்தா, பரிட்சைக்கு படிக்க நாம சொல்லித்தந்த வழிகள், அவங்களுக்கு பொருத்தமானதான்னு சோதிச்சு பார்த்து, புரிஞ்சுக்க அவங்களுக்கு நேரம் இருந்திருக்கும். என்ன தான் நாம நல்லது செய்ய நினைச்சு, ஈஸியா பாடங்களை படிச்சு பரிட்சைக்கு தயாராகுறது எப்படின்னு கூட்டம் நடத்தியிருந்தாலும், பரிட்சை நெருங்குற, கடைசி சமயத்துல நாம சொன்னதை முழுசா எடுத்துக்கிட்டு, ஏற்கனவே அவங்க பின்பற்றி வர்ற படிப்பு முறைகளை மாற்றிக்கிட்டு , அதனால ஒருவேளை அவங்க தேர்வுல சரியா மதிப்பெண் பெறாம போனா? அது முழுக்க முழுக்க நம்மளேட தவறுடா. அதான் எனக்கு கொஞ்சம் டென்சனா இருக்கு...!"
முகிலன் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே பட்டது.
"நாம இல்லத்துக்கு போய் மாணவர்களின் தேர்வு முடிவுகளை கேட்கலாமா?"
"மச்சி இன்னும் நெட்டுலயே வந்திருக்காதுடா.. மதியம் வரை பார்க்கலாம். அப்படியும் அப்டேட் ஆகவில்லைன்னா.. மதியம் லஞ்ச் பிரேக்குல போய் எட்டிப் பார்த்துட்டு வந்திடலாம். பேசி வைத்துக்கொண்டாலும் வேலையே ஓடவில்லை. ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை முடிவுகள் வரும்
தளத்தினை பார்த்து, பார்த்து வேலை செய்தான். அப்டேட் ஆகவே இல்லை.
மதியம் உணவு நேரம் வந்ததும், ரவியின் நாற்காலி தேடி ஓடினான். " இல்லத்துக்கு போய்ட்டு வரலாமா..?"
"ஒரு நிமிசம்டா... இதோ கிளம்பிடலாம்"
ரவி வண்டி ஓட்ட, முகிலன் பின்னால் அமர்ந்துக் கொண்டான் பயணம் முழுவதும் முகிலன் பதற்றமாய் இருந்தான். நல்லபடியா முடிவுகள் வந்திருக்கவேண்டும். எல்லோரும் வெற்றி பெற்றிருந்தால் நல்ல இருக்கும். அப்படி இல்லாமல்... நினைத்துப் பார்க்கவே வருத்தமாக இருந்தது. அவர்களை அவர்கள் போக்குக்கு போக விட்டிருக்கலாம். கடைசி நேரத்தில் இப்படி தங்களில் படிப்பறிவை அந்த மாணவர்கள் மீது ஏற்றிவிட்டிருக்க வேண்டாமோ.. மனம் கண்டபடி சிந்தித்துக்கொண்டே இருந்தது.
சேவை இல்லத்தை அடைந்ததும் முகிலன் ஓட்டமும் நடையுமாய் இல்லத்தின் காப்பாளரை சந்திக்கச் சென்றான்....
"சார் நாங்க எங்க அலுவலக குழு மூலமா , பரிட்சைக்கு தயாராகிக்கிட்டிருந்த பத்தாம் வகுப்பு பிள்ளைகளுக்கும, வழிகாட்டி பாடம் எடுக்க வந்திருந்தோம். இன்று முடிவுகள் வந்திருக்கு. நம்ம மாணவர்களின் தேர்ச்சி பற்றி தெரிந்துக் கொள்ளதான் வந்திருக்கோம்... முடிவுகள் எப்படி வந்திருக்கு சார்....?
"உங்களை எல்லம் நல்ல நினைவு இருக்குப்பா.... முடிவுகள் நல்லா வந்திருக்கு எல்லா பிள்ளைகளும் நல்ல மதிப்பெண் எடுத்திருக்காங்க..
உங்க நல்ல மனசுக்கு நீங்க இன்னும் பெரிய நிலையை அடைஞ்சு ,இது போல பல நிகழ்ச்சிகள் நடத்தி பல இளைய தலைமுறைகளுக்கு சேவை செய்யனும்ன்னு வாழ்தறேன். உங்களை மாதிரி இளைய தலைமுறைகள், நம் நாட்டின் வருங்கால தூண்களா வரப்போற மாணவ சமுதாயத்திற்க்கு சேவை செஞ்சா, இந்தியா வல்லரசாகுற காலம் வெகு தொலைவில் இல்லைப்பா." நெகிழ்வுடன் உணர்ச்சி பெருக்கோடு சொன்னார்.
முகிலன் ரொம்ப மகிழ்ச்சியாய் உணர்ந்தான்.
"சரி சார், கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு சார்... இனி நாங்க தனிப்பட்ட முறையிலையும் வந்து, அடிக்கடி பிள்ளைகளுக்கு பாடம் எடுக்க அனுமதி வேண்டும் சார்..."
"கண்டிப்பா வாங்க ரொம்ப பயனுள்ளதா இருக்கும்..."
"சரி சார் நாங்க போய்ட்டு வரோம். தங்கள் அலுவலகத்தில் ஏற்படுத்தபட்டிருக்கும் கல்விக்குழுவின் சேவை, விழலுக்கு இறைத்த நீராய்... வீணாகாமல் சரியாய் பலன் தந்திருப்பது மனநிறைவாய் இருந்தது. அந்த நிறைவோடு அலுவலகம் நோக்கி பயணித்தனர்.
ஆட்டோ என்றதும் பலருக்கும் சூடு போட்ட மீட்டர்கள் தான் நியாபகம் வரும்....அப்படி இருந்தாலும் சில சமயங்களில் நம் பயணிக்கும் ஆட்டோ பயண்ங்களை நம்மால் மறக்க முடியாத சம்பவமாய் மனதில் பதிந்து விடும்...அப்படி பதிந்த சில பயணங்களைத் தான் உங்களுடன் அசைப்போட்டு உங்களையும் பயணிக்க வைக்கப் போகிறேன்...
பெரும்பாலும் நாம் ஆட்டோக்களில் பயணம் செய்யும் பொழுது பல வித்தியாசமான ஓட்டுனர்களை இல்லை இல்லை மனிதர்களை.... சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்!!!
நாம் ஆட்டோக்களில் ஏறும் முன் அவர்கள் பேச்சிலேயே ஒர் அளவு எடைப் போட்டுவிடலாம் அவர்களை....போகும் இடம் சொன்னதும் நமக்கும் அவருக்கும் நிகழும் முதல் உரையாடல் இதுவாகதான் இருக்கும்
"எவ்வோளோ கொடுப்பிங்க"?
இருவருக்கும் ஏற்றவாறு நாம் ஒரு தொகை சொன்னால் இனிதாகப் பயணம் தொடங்கும்... அப்படி இல்லை என்றால் தொகையில் சில மாற்றங்களோடு தொடரும்... அப்படி இருவருக்கும் சரிப்படவில்லை என்றால் அத்தோடு முடிந்து விடும்.....
சில ஓட்டுனர்கள் இடத்தை சொன்னதும் எங்கோ சுற்றுப்பயணம் செய்யப் போகும் அளவு தொகையை கேட்ப்பார்கள் பக்கத்தில் ஒரு இடம் சொன்னால்,பாண்டிச்சேரி போவதற்க்கான தொகையை சொல்வார்கள் சிலர் .அப்போ நமக்கு வரும் பாருங்கள் கோபம். அப்படியே கையில இருக்கும் பேக்'கால் அவரை "ஏண்டா இப்டி பகல்கொள்ளை அடிக்கறிங்க?" ன்னு நாலு சாத்து சாத்தனும்ன்னு தோனும். ஒன்றுமே சொல்லாமல் அடுத்த ஆட்டோவை தேடத் தொடங்கி விடுவோம்...சிலர் இருவருக்கும் ஏற்ற பயணத் தொகையை சரியாக கேட்பார்கள் அப்போதே நமக்கு அந்த ஓட்டுனர் மீது ஒரு மதிப்பு வந்துவிடும்...அப்படி தொடங்கும் சில பயணங்கள் மகிழ்ச்சியாய் அமையும்
சில ஓட்டுனர்கள் அரசியல் தொடங்கி, குடும்ப விசயங்களையும் பகிர்ந்து கொள்வார்கள் சில பேச்சுகள் நம்மை மிகவும் கவரும்....
ஒரு சமயம் அலுவலகத்தில் இருந்து வீடு வர நானும் என் தோழியும் ஆட்டோவில் போகலாம் என்று எங்கள் பயணத்தை தொடங்கினோம்...
நாங்கள் பேசிக்கொண்டே வர எங்கள் உரையாடலில் அவரும் கலந்துக் கொண்டார்.... அப்படி பேசிக்கொள்ளும் பொழுது...கணவன் மனைவிக்குள் ஒரு புரிதலில் இருந்துவிட்டால் பிரச்சனையே இல்லை...
எனக்கு திருமணம் முடிந்து 25 வருடங்கள் ஆகப் போகுது என் மனைவிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு வந்தது இல்லை இருவரும் நல்ல புரிததலில் இருக்கிறோம் என்று அவர் சொன்னதைக் கேட்டு...
எனக்கும் என் தோழிக்கும் ஆச்சர்யம் அவரது பேச்சில் பயண நேரமே தெரியவில்லை....
சில ஓட்டுனர்கள் அரசியலை அப்படி பேசுவார்கள்.... சிலர் சரியாகவும், சிலர் புரியாமலும் பேசிக் கொண்டு வருவார்கள்..அப்படி அவர்கள் பேசும்போது அவர்கள் தற்போது ஆளும் அரசு எப்படி செயல்படுகிறது என்று சற்று சரியாகவே யூகிக்க முடியும்!
காலை அலுவலகத்திற்கு தாமதம் ஆனதால் ஆட்டோவில் போகலாம் என்று ஆட்டோ கூப்பிட்டு செல்லும் இடம் சொன்னதும் நியாயமான தொகை கேட்டதால் ஒன்றுமே சொல்லாமல் என் பயணத்தை தொடங்கினேன்... சிறிது நேரத்தில் நன்றாக பேசினார். அப்படியே எங்கள் உரையாடல் தொடரும் போது...
உங்களுக்கு ஒரு நாள் எவ்வளவு கிடைக்கும் என்றுக் கேட்டேன்..நல்ல சவாரி கிடைத்தால்,சில நாட்களில் 200லிருந்து 500 வரை கூட கிடைக்கும்.சில நாட்களில் சரியான சவாரியே கிடைக்காமல் ,பெட்ரோல் செலவு வைப்பதும் உண்டு. என்றார்
ஆட்டோ வாடகை எவ்வளவு என்றால் 1150 ரூபாய் என்றார் மாதா மாதமா?என்றால் இல்லை வாரா வாரம் என்றார்!!!
ஒரு நாளைக்கு 200 ரூபாய் கிடைத்தால் அவருக்கு வாரம் 1400 கிடைக்கும் அதில் 250 சேமிக்க முடியும் அதிலும் எரிப்பொருள் செலவெல்லாம் போக 150 மிஞ்சும் என்றாலும் மாத வருமானமாய் மிக குறைந்த வருமானமே அவர்களுக்கு கிடைகிறது..அதில் அவர்கள் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு பிள்ளைகளையும் படிக்க வைப்பது என்பது எவ்வளவு கடினம் என்று யோசித்தால் கஷ்டம் தான்!!!!
சில ஓட்டுனர்கள் தவறுகள் செய்வதால் பல நல்லவர்களை நாம் கவனிக்க தவறிவிடுகிறோம்....
ஆட்டோவில் பணத்தை மறதியாக விட்டுச் சென்றாலும் அதை கவனமாக காவலரது துணையுடன் உரியவரிடம் சேர்க்கும் பல ஓட்டுனர்களை பற்றி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்!!!!
பிறந்த நாளை
கொண்டாட
உனக்காக
பரிசுப்பொருளை
தேடித் தேடி
வாங்கி வர
நீயோ
தேடல்களே
இல்லாமல்
எடுத்து
வருகிறாய்
உன் இதழ்களில்!
தினமும்
கனவில்
பார்த்துக் கொள்வோம்
என்ற
நம்பிகையில் தான்
முடிவடைகிறது
நம்
சந்திப்புகள்!!
நாம்
சந்தித்த
இடங்கள்
எல்லாம்
பூஞ்சோலையாய்
பூத்துக் குலுங்குகின்றன
நம்
முத்த சாரல்களில்...
முரட்டுத் தனமான
அணைப்புகளையும்
மென்மையான
முத்தங்களையும்
ஒரு சேர
வைத்திருக்கும்
என்
காதல் ஹிட்லர்
நீ!!!
வாரநாட்களில் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து விடலாம் என்றாலும்...ஞாயிற்றுக் கிழமைகளில் அது கொஞ்சம் சிரமம்தான்.. பகலில் அதிக நேரம் தூங்கிவிட்டு... இணையத்தில் நண்பர்களோடு அரட்டை அடித்து விட்டு... மதியம் உணவு அருந்தியதும் மீண்டும் ஒரு தூக்கம் போட்டு சரி கொஞ்சம் நேரம் தொலைக்காட்சியை பார்ப்போமேன்னு போட்டால் பார்த்து பார்த்து அலுத்துப் போன படங்களே திரும்ப ஓடிக் கொண்டிருக்க...
பாடல்கள் கேட்கலாமேன்னு அலைவரிசையை மாற்றினால் அவர்கள் பேசியே கொல்கிறார்கள்
சரி மக்கள் தொலைக்காட்சியில் வித்தியாசமாக எதும் இருக்கும் பார்கலாமேன்னுவைத்ததும் வினுசக்கரவர்த்தியும் மெளனிகாவும் காட்சியில் இருந்தார்கள்..சரி என்னவாக இருக்கும் என்று பார்க்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் அது ஒரு குறும்படம் என்று விளங்கியது... ச்சே கொஞ்சம் முன்னமே வைத்திருந்தால் பெயரைப்பார்த்திருக்கலாம் சரி போகட்டும் எப்படிதான் இருக்கு என்று பார்ப்போமேஎன்று கதையில் ஐக்கியம் ஆனேன்... நான் பார்கத தொடங்கியதில் இருந்து உங்களிடம் பகிர்கிர்ந்துக் கொள்கிறேன்!!
கணவனுக்கு கஞ்சியை கொடுத்துவிட்டு காய்கறி சுமப்பதற்காக கொத்தவரஞ்சாவடிசெல்கிறேன் நீ பத்திரமா இரும்மான்னு சொல்ல இல்லைங்க நானும் உங்க கூடவரேன் கூட்டிட்டு போங்கன்னு கேட்க சரி வா போகலாம்ன்னு இருவரும் வெளியே வருகிறார்கள்..
"நீ உக்காருயா நான் இழுக்குறேன்னு"
மனைவி கணவனை சுமை சுமக்கும் வண்டியில் உட்காரச்சொல்லி இழுக்கிறாள் உன்னால் முடியாது நான் இழுக்குறேன் நீ வநது உட்காருன்னு சொல்லும் கணவனைஇல்ல நான் இழுப்பேன் நீ இருய்யான்னு சொல்லி இழுத்துக் கொண்டே நடக்கிறார் கணவன் அசந்துப் போய் வண்டியில் படுத்து உறங்கிவிடுகிறார்..
இதுவரை இழுத்து பழக்கமிலாததால் சிரமப்பட்டு இழுக்கிறார் மிக சோர்வுடன் வேர்வையில் நனைந்து இழுத்துக் கொண்டு சேரும் இடம் வந்ததும் வண்டியை நிறுத்துகிறாள்...
வண்டி நின்றதும் தூக்கம் கலைந்து விழிக்கும் கணவன்
"என்னப் புள்ள நான் தான் அசதில தூங்கிட்டேன் என்ன எழுப்பிற்கலாம்ல"
அசதில நீ நல்லா தூங்கிட்டயா அதான் எழுப்ப வேணாம்ன்னு விட்டுடேன்"
என்று மனைவி செல்ல காட்சி நகர்ந்தது...
வந்து உட்காரு பிள்ள நான் உனக்கு சாப்பாடு வாங்கிட்டு வரேன்னு எதிர்ல இருக்கும் இட்லி கடைக்கு சென்று இட்லி தோசை வாங்கி வந்து
நீ சாப்பிடு பிள்ள நான் மூட்டைகளை எடுத்துட்டு வந்துடுறேன்னு முட்டையை எடுக்க போகிறார்..
மூட்டைகளையெல்லாம் அடுக்கி வைத்துவிட்டு மனைவி சாப்பிட்டு முடித்ததுதட்டையும் பணத்தையும் கொடுத்து விட்டு வந்தவர் மனைவியிடம் பீடா கொடுத்து போட்டுக்க புள்ள!!!
சரிய்யா நான் அப்படியே நடக்குறேன் நீ வண்டியை இழுத்துகிட்டு வான்னு சொல்ல..
நீ வண்டில வந்து உட்காரு புள்ள நான் இழுக்குறேன் வான்னு மனைவியைவண்டியில் உட்காரவைத்து இழுக்க தொடங்குகிறார்...
களைத்துப் போய் அவர் இழுத்துக் கொண்டு நடக்க வழியில் அவர் நண்பர் ஒருவர் வருகிறார்
"என்னப்பா இது இருக்கிற பளுப் போதாதுன்னு உன் பொஞ்சாதியையும் படுக்கவைச்சி இழுக்குறியேன்னு" கேட்க
காலம் முழுக்க நம்மை சுமக்கிற வரங்களை நாம பளுவாய் நினைக்ககூடாதுன்னு சொல்லிவிட்டு வண்டியை மீண்டும் இழுக்க தொடங்குகிறார்....
அத்துடன் படம் நிறைவடைகிறது...
20 நிமிடங்களில் கணவண் மனைவி உறவை மிக் அழகாக விளக்கியிருந்தார்கள்...
கடைசிவரை படம் பெயர் தெரியவில்லை என்றாலும் வாழ்க்கையை மிக அழகாக விளக்கிய பெயர் தெரியாத இயக்குனருக்கும் ஒளிப்பரப்பு செய்த மக்கள் தொலைக்காட்சிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!!!!