கண் சிமிட்டும் காதல்!!!  

பதித்தவர் : எழில்பாரதி in

திருமணத்திற்கு
முன்னும் பின்னும்
இருக்கும் காதலுக்கு
என்ன வித்தியாசம்
என்றதும்
நானாக பெறும் முத்தத்திற்கும்
நீயாக தரும் முத்தத்திற்கும்
உள்ள வித்தியாசம் தான்
என்று
கண் சிமிட்டி சிரிக்கிறாய்!!!

உன் வருகை
இல்லாத நாட்களில்
அழுது ஆர்பாட்டம் செய்யும்
நம் காதல் குழந்தையை
எப்படிதான் சமாளிப்பதோ!!!

நீ
முத்தம் கேட்டு
கொடுக்கவில்லை
என்றதும்
திட்டி தீர்த்து விடுகின்றன
என் இதழ்கள்!!!

முத்தத்தில்
கூட
சோர்ந்து போகாத
நம்
இதழ்களை
சோர்வடைய செய்கிறது
ஊடல்
உடைந்து
எழுத்
துடிக்கும்
முதல் வார்த்தை!!!

உன் அருகாமையை
அனுபவிப்பதா
இல்லை
உன் சில்மிஷங்களை
ரசிப்பதா
எனத்
தெரியாமல்
திணறச்செய்கிறது
உன் காதல்!!!

This entry was posted on Thursday, May 01, 2008 and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

22 மழைத்துளிகள்

கண் சிமிட்டும் காதல்...ரொம்ப அழகாக இருக்கிறது எழில்!!

\\முத்ததில்
கூட
சோர்ந்து போகாத
நம்
இதழ்களை
சோர்வடைய செய்கிறது
ஊடல்
உடைந்து
எழுத்
துடிக்கும்
முதல் வார்த்தை!!!\

வாவ்!!! சிம்பிளி சூப்பர்ப் எழில்!!

ezhil yakkov,sema romantic mood pola :)
//திருமணத்திற்கு
முன்னும் பின்னும்
இருக்கும் காதலுக்கு
என்ன வித்தியாசம்
என்றதும்
நானாக பெரும் முத்தத்திற்கும்
நீயாக தரும் முத்தத்திற்கும்
உள்ள வித்தியாசம் தான்
என்று
கண் சிமிட்டி சிரிக்கிறாய்//

ellame vivaramathaan irrukinga...ennai mathiri appavi sirumikuthaan ithu ellam theriyala :)))


nalla irukku akka...keep on writing more

அடடா.. தலைப்பே கவிதை மாதிரி இருக்கே:) படிச்சுட்டு வர்ரேன்:)

//திருமணத்திற்கு
முன்னும் பின்னும்
இருக்கும் காதலுக்கு
என்ன வித்தியாசம்
என்றதும்
நானாக பெரும் முத்தத்திற்கும்
நீயாக தரும் முத்தத்திற்கும்
உள்ள வித்தியாசம் தான்
என்று
கண் சிமிட்டி சிரிக்கிறாய்!!!//

வாவ்.. இது ரொம்பவே நல்லாயிருக்கு:)

//உன் வருகை
இல்லாத நாட்களில்
அழுது ஆர்பாட்டம் செய்யும்
நம் காதல் குழந்தையை
எப்படிதான் சமாளிப்பதோ!!![//

அவ்வ்வ்வ்... சூப்பரேய்..:))

அருமை....

ஆனா... எல்லாருமே முத்த கவிதையா எழுதறாங்க...


என்னானே தெரியல...

கண் சிமிட்டும் அழகான கவிதைகள்.

உன் அருகாமையாய்
அனுபவிப்பதா
இல்லை
உன் சில்மிஷங்களை
ரசிப்பதா
எனத்
தெரியாமல்
திணறசெய்கிறது
உன் காதல்!!!


அருமையான வரிகள்..... பாரதி....
புகைப்படங்களும் அற்புதம்.........

கவிதை சூப்பரா இருக்கு...

எழில் உங்க கவிதை ரொம்ப சூப்பர்!!!

//நானாக பெரும் முத்தத்திற்கும்
நீயாக தரும் முத்தத்திற்கும்
உள்ள வித்தியாசம் தான்
என்று
கண் சிமிட்டி சிரிக்கிறாய்//

ரொம்ப அழகான வரிகள். ரசித்து படித்தேன்! உங்கள் கவிதை மழை தொடரவும். நனைய நான் ஆவலுடன் இருக்கிறேன். :)) வாழ்த்துகள்!

எழில் ..

// கண்ணாடி மழை //
// கண் சிமிட்டும் காதல்!!! //

அருமை ..

கவிதைகளும் ... :)

கண் சிமிட்டும் காதல்...ரொம்ப அழகாக இருக்கிறது எழில்!!

//திருமணத்திற்கு
முன்னும் பின்னும்
இருக்கும் காதலுக்கு
என்ன வித்தியாசம்
என்றதும்
நானாக பெரும் முத்தத்திற்கும்
நீயாக தரும் முத்தத்திற்கும்
உள்ள வித்தியாசம் தான்
என்று
கண் சிமிட்டி சிரிக்கிறாய்!!!//

வாவ்.. இது ரொம்பவே நல்லாயிருக்கு:)

Aanalum kavidhai ellam summa shokka keedhu :)) Asithitta da chellam :)

Ellamae supera irundhaalum my fav is

//உன் அருகாமையை
அனுபவிப்பதா
இல்லை
உன் சில்மிஷங்களை
ரசிப்பதா
எனத்
தெரியாமல்
திணறச்செய்கிறது
உன் காதல்!!!//


:))

Seri ezhilakka... appadiyae indha kavidhaikkellam kaaranamaana unga aal perayum solli irukalaam illa???

This comment has been removed by a blog administrator.

ஆகா...தமிழ்மணத்தின் மொத்த கும்மியும் இங்க தானா..!! ;))

கவிதை எல்லாம் அழகாக இருக்கு...

\\\உன் அருகாமையை
அனுபவிப்பதா
இல்லை
உன் சில்மிஷங்களை
ரசிப்பதா
எனத்
தெரியாமல்
திணறச்செய்கிறது
உன் காதல்!!!\\

ரொம்ப நல்லாருக்கு ;))

உன் அருகாமையை
அனுபவிப்பதா
இல்லை
உன் சில்மிஷங்களை
ரசிப்பதா
எனத்
தெரியாமல்
திணறச்செய்கிறது
உன் காதல்!!!

:)))))

மிக அருமையான கவிதைகள்... மற்றும் மிக அருமையான பதிவுகள்... காதல் கவிதைகள் அத்தனையும் பிரமாதம்... மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்...

சாகாவரம்
பெற்று
வளர்ந்துக் கொண்டே
இருக்கிறது
நம்
முதல் முத்தம்!!!
............


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நல்லாயிருக்கு

Post a Comment